Pages

Thursday, May 07, 2015

மே 14 முதல் தற்காலிக மதிப்பெண் சான்று

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு முதல்முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் மே 14 முதல் தங்களது பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மாணவர்களே நேரடியாகத் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment