Pages

Sunday, March 22, 2015

கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு

கபீர் புரஸ்கார்' விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவது குறித்து, தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிறர் உயிரை காப்பாற்றியவர்கள், வீரதீர செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில், 'கபீர் புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இந்த விருதுக்கான, விண்ணப்பங்கள் பெறுவது குறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:'கபீர் புரஸ்கார்2015 விருதுக்கு தகுதியான விண்ணப்பங்களை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பரிந்துரையுடன், அரசுக்கு அனுப்ப வேண்டும். பரிந்துரைக்க விண்ணப்பங்கள் இல்லாவிடில், 'இன்மை' அறிக்கை தயார் செய்து, உடனடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், அனுப்ப வேண்டும். தகுதி வாய்ந்தவர்களின் திறமை மற்றும் தகுதிகளை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment