தமிழ்நாடு மாநிலத் தேர்தல் கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சீதாராமன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் கமிஷனராக, 2011ல் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சோ.அய்யர் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம், 2013ல் முடிந்தது. அவருக்கு, இரண்டு ஆண்டுகள் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இம்மாதம், 9ம் தேதியுடன், அவரது பதவிக் காலம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, புதிய மாநிலத் தேர்தல் கமிஷனராக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இப்பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பார் என, தலைமைச் செயலர் ஞானதேசிகன் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதாராமன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1998ல், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றவர்.
No comments:
Post a Comment