Pages

Friday, February 27, 2015

மாணவர்கள் சுற்றுலா அழைத்துச்செல்லும் போது கவனிக்க வேண்டியவை

* பள்ளிக்கூட மாணவர்-மாணவிகளை சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த மாவட்டத்திற்கு சுற்றுலா செல்கிறார்களோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.

* மழை அல்லது கடும் வெயில் காலங்களில் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது. பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்

* மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.

* மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டுனர் மது அருந்துபவராக இருக்கக்கூடாது.

* சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த இடத்திற்கு அழைத்துச்செல்லப்போகிறோம் என்பதை முன்கூட்டியே பெற்றோரிடம் கூறி அவர்களின் முழு சம்மதத்துடன் அனுமதி கடிதம் பெறுவது அவசியம்.

* 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுற்றுலா செல்ல வேண்டும். நீர்நிலைக்கு ...

* நீர் நிலைகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.

* கூடிய மட்டும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல அனைத்து முன்ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் கவனிக்க வேண்டும்.

* இந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment