Pages

Tuesday, February 03, 2015

செல்வமகள் சேமிப்புத் திட்டம் தபால் நிலையத்தில் துவக்கம்

மத்திய அரசின் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். பெண்குழந்தைகளை பாதுகாக்க 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை' அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ?? வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சேரலாம். நடப்பு ஆண்டில் மட்டும் 11 வயது வரை உள்ள குழந்தைகள் சேமிப்பு கணக்கு துவக்கலாம்.

கணக்கில் குறைந்தபட்சம் ???? ரூபாய் செலுத்தலாம். ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ?.? லட்சம் ரூபாய் வரை டிபாசிட் செய்யலாம். இத்தொகைக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். 18 வயது அடைந்த உடன் கல்வி செலவிற்காக தொகையில் பாதியை எடுத்துக் கொள்ளலாம். 21 வயதில் முதிர்வு தொகை முழுதும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாதுகாவலர் இரண்டு குழந்தைகளுக்கு கணக்கு தொடங்க முடியும். ஜன.,?? ல் இத்திட்டம் சென்னையில் துவக்கப்பட்டது. நேற்று முதல் இத்திட்டம், நகர் பகுதி முழுநேர போஸ்ட் ஆபீஸ்களில் துவக்கப்பட்டது.

No comments:

Post a Comment