Pages

Monday, January 12, 2015

ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் -dinamalar

திருப்பூர் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அரண்மனைப்புதூர், தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது; தலைவர் பிரேமா தலைமை வகித்தார்.மூன்று ஆண்டுகளாகியும், உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் நியமிக்காததை கண்டிப்பது, வருங்கால வைப்பு நிதி கணக்குகளை உடனடியாக முடித்து, கணக்கு சீட்டு தாமதமின்றி வழங்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, தெற்கு மாநகர செயலாளர் கனகராஜ், வடக்கு வட்டார செயலாளர் ஜோசப், தலைவர் மணிகண்ட பிரபு கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொருளாளர் டேவிட் பால்ராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment