2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் தந்து மாற்றிக் கொள்வதற்காக தரப்பட்ட அவகாசம் வரும் ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது. கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் தாள்களில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் கடந்த 2005ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. எனவே, பாதுகாப்பு குறைந்த 2005க்கு முந்தைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற எண்ணிய ரிசர்வ் வங்கி, இது குறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிட்டது.
அதன்படி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் தாள்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது. அதன் பின்னர் அந்த அவகாசம் ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டுக்கு பின் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்ட ஆண்டு பின்புறம் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன் அச்சான தாள்களில் அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது.
Pages
▼
No comments:
Post a Comment