Pages

Saturday, May 17, 2014

பாடப்புத்தகம் கிடைக்குமா

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2 ல் மீண்டும் திறக்கப்படுகின்றன. முதல் நாளே, மாணவர்கள் அனைவருக்கும், விலையில்லா பாடப் புத்தகம் வழங்குவது, அரசின் பிற நலத்திட்ட உதவிகளையும், தாமதமின்றி செயல்படுத்துவது குறித்து, விவாதிக்க மீள் ஆய்வு கூட்டம், சென்னையில் நாளை (மே 19ல்) நடக்கிறது. இதில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்று, நடப்பு கல்வி ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து, விவாதிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment