Pages

Tuesday, May 06, 2014

ஆகஸ்ட் 24ல் ஐ.ஏ.எஸ்., முதல் நிலை தேர்வு

இந்த ஆண்டிற்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, ஆகஸ்ட் 24ல், நடைபெறும்' என, யூ.பி.எஸ்.சி., அமைப்பு அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளுக்காக, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்காக, ஆண்டுதோறும் நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, ஆகஸ்ட் 24ல், நடைபெற உள்ளது. முக்கிய தேர்வான, மெயின் தேர்வு, டிசம்பர் 14ல் நடைபெறலாம் என, இந்த தேர்வுகளை நடத்தும், மத்திய பணியாளர் தேர்வாணையமான, யூ.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என, மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்பட்டு, தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

No comments:

Post a Comment