Pages

Thursday, March 06, 2014

சி.சி.இ., முறை மதிப்பெண்களை மட்டுமே அதிகரித்துள்ளது

பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது. இதன்படி, 49.8% பள்ளிகள் மட்டுமே சராசரியான தரநிலையில் உள்ளன என்றும் 9.1% பள்ளிகளின் தரம் முன்னேற்றமடைய வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு CCE எனப்படும் Continuous and Comprehensive Evaluation அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.  கடந்த 2010ம் ஆண்டு முதல் தேர்ச்சி விகிதம் 9.48% என்பதாக அதிகரித்தது. அதன்மூலம் 2013ம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி 98.76% என்ற சாதனை அளவை எட்டியது.ஆனால், இந்த CCE முறை மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைத்தான் அதிகரித்துள்ளதே தவிர, கற்பித்தலை மேம்படுத்தவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment