Pages

Wednesday, February 19, 2014

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடம் : போட்டி தேர்வு நடத்தி நிரப்ப முடிவு

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில், உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், நேரடியாக நிரப்பப்பட்டது. தற்போது, திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், போட்டித் தேர்வு நடத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேளாண்மை கமிஷனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப, அனுமதி அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment