Pages

Saturday, December 28, 2013

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு-நெட்' நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

   இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியைப் பெறுவர். டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 47 மையங்கள்: சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ், எத்திராஜ், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, புதுக் கல்லூரி, ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் பெண்கள் கல்லூரி என 13 மையங்களிலும், கோவையில் 9 , திருச்சியில் 10 மற்றும் மதுரையில் 15 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment