Pages

Monday, December 16, 2013

வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்

   சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், நாளை ஸ்டிரைக்கில் குதிக்கின்றனர். இதனால், நாடு முழுவதும், பொதுத்துறை வங்கிகளின் பணிகள், பாதிப்புக்கு உள்ளாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையே, முதன்மை தொழிலாளர் கமிஷனர் முன் நடந்த பேச்சுவார்த்தையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஸ்டிரைக் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், 27 பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில், 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

No comments:

Post a Comment