Pages

Saturday, November 16, 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வு

   இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் கிரேடு–4 பணிக்கான காலியிடங்கள் தமிழ்நாடு தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் கடந்த ஜூலை மாதம் 19–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 23 ஆகும்.

இந்த பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 136 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 36 ஆயிரத்து 250 பேர் எழுதினர். சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 12 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள்–1 பொதுத்தமிழும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தாள்–2 சைவமும், வைணமும் சம்பந்தப்பட்ட தேர்வும் நடைபெற்றது.

காலை, மாலை நடைபெற்ற தேர்வுகள் கொஞ்சம் கடினமாக இருந்ததாக தேர்வு முடித்துவிட்டு வந்த தேர்வாளர்கள் கூறினர்.

No comments:

Post a Comment