Pages

Monday, November 04, 2013

20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்

பி.எப்., தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில், நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம், என, பி.எப்., ஆணையர் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எப்., தொகை முதிர்வு மற்று கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, ஐந்து நாட்களில் தீர்வு காணப்படுகிறது. அதிகபட்சமாக, 20 நாட்களில் தீர்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காமல், நிலுவையிலிருந்தால், சந்தாதாரர்கள், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்களில், தேவையான தகவல்கள் இல்லாமல் இருந்தால், அவற்றை பூர்த்தி செய்தும் அளிக்கலாம். இவ்வாறு, பிரசாத் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment