Pages

Saturday, October 12, 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எஸ்.எம்.எஸ்., பிரசாரம்

18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம், தேர்தல் கமிஷன் பிரசாரம் செய்துவருகிறது. 2014 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாகக்கொண்டு, 18வயது பூர்த்தியடைந்தவர்களை, புதிய வாக்காளராக சேர்ப்பது, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட, வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தப்பணிகள், அக்.,1 முதல் நடந்து வருகின்றன.

இம்மாதம் 31வரை, இப்பணி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அக்.,6ல், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அக்.,20,27லும், இம்முகாம் நடத்தப்பட உள்ளது. இதனிடையே, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,மூலம், தேர்தல் கமிஷன் பிரசாரம் செய்துவருகிறது. மேல்விபரங்களை, தீதீதீ.ஞுடூஞுஞிtடிணிணண்.tண.ஞ்ணிதி.டிண என்ற இணைதளமுகவரியில் பார்த்து தெரிந்து கொள்ள, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment