Pages

Saturday, October 05, 2013

கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான, சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment