Pages

Sunday, October 20, 2013

தொடக்கக்கல்வித் துறையில் சிறந்த பள்ளிக்களுக்கு கேடயம்

   தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தனியார், அரசு பள்ளிகளிடம் போட்டியை ஊக்குவிப்பதற்காக சிறந்த பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்புத்திறன், செயல்வழி கற்றல், கணிதம் அடிப்படை திறன், குடிநீர், கழிப்பறை வசதி, கம்யூட்டர் பயன்பாடு, விளையாட்டு, பதிவேடு பராமரிப்பு உள்ளிட்ட 14 வகைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் தலா மூன்று பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநரை கொண்ட தேர்வுக்குழு சிறந்த பள்ளிகளுக்கான பட்டியலை தயாரித்து வருகிறது.

No comments:

Post a Comment