Pages

Tuesday, October 01, 2013

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

  சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கு உதவித் தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இதுவரை கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு www.momascholarship.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment