Pages

Friday, October 04, 2013

அக்டோபர் 7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது !

பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை அக்டோபர் 7ம் தேதி முதல் உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலைக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒரு முறை சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி உயர்த்தப்பட்ட சரக்கு ரயில் கட்டணம், மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.

நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையல், பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு அக்., 7 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment