Pages

Friday, October 25, 2013

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது.

இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும். இப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment