Pages

Tuesday, September 24, 2013

வங்கி ஸ்டிரைக் வாபஸ்

    "இப்போதைக்கு, வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், இன்று நடத்தவிருந்த ஸ்டிரைக்கை, வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாக வௌ?யான தகவலை அடுத்து, இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட வங்கிகள் சங்கத்தினர், இன்று, ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை தலைமை கமிஷனர் தலைமையில், வங்கிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், நிதி அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன்பின், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாச்சலம் கூறுகையில், ""பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஸ்டிரைக் மேற்கொள்ளும் திட்டம், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment