Pages

Tuesday, September 10, 2013

டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கோளாறு : பட்டதாரிகள் தவிப்பு

 துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங் களூக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.  அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி முதல் விண்ணபிக்கலாம் என்று  டி.என்.பி.எஸ்.சி  அறிவித்திருந்தது. கல்வித்தகுதி:

தமிழகத்தில் பட்டதாரிகள் அனைவரும் விண்ணபிக்கலாம் என்பதால்  ஆர்வத்துடன் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் இன்று காலை முதல் டி.என்.பி.எஸ்.சி இணை யதளத்தில் விண்ணப்பம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்.  சர்வர் கோளாறு என்று காரணம் கூறப்படுகிறது.  இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment