Pages

Tuesday, August 27, 2013

ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷன் உத்தரவு

   லோக்சபா தேர்தலுக்காக, 2014 ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, புது வாக்காளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். ஜன., 6ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் லோக்சபா தேர்தலில், தகுதி உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 2014 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.

நீக்கம், திருத்தம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்படும். அக்டோபரில், ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர்கள் சேர்க்கப்படுவர். "இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின், ஏஜன்ட்கள் பங்கேற்று, வாக்காளர்கள் விடுபடாமல், தேர்தல் கமிஷனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தப் பணிகளுக்கு பின், இறுதிப் பட்டியல், 2014 ஜன., 6ல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment