Pages

Sunday, July 21, 2013

சிறப்பாக பணி செய்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அரசுப் பணிகளில் மிகச் சிறப்பாக செயல்படும் ஊழியர்கள் முதல்வரால் கவுரவிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு சிறந்த செயல்பாடுகளுக்கான விருது மற்றும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்காக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் சிறந்த தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சிறந்த தகுதிக்குரிய நபர்கள் குறித்த விவரங்களை தயாரிக்கும் படிவம் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்கள் துறைகளில் சிறந்ததாக கருதப்படும் ஊழியர்கள், ஆசிரியர்கள் இருந்தால் அவர்களது விவரங்களை உரிய பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் உள்ள சிறந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களை நாளைக்குள் (23ம்தேதி) பரிந்துரைத்து அனுப்ப தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார

். இதேபோல் அனைத்து துறைகளிலும் சிறந்த  ஊழியர்கள் குறித்த விவரங்கள் 24ம் தேதிக்குள் அரசால் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக தேர்வாகும் 3 நபர்களுக்கு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர் விருது வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment