Pages

Friday, July 26, 2013

ஆசிரியர் கூட்டணிஆர்ப்பாட்டம்

்:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணி சார்பில், அரண்மனைப்புதூர்மாநகராட்சி பள்ளி முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிவகாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி துணை செயலாளர் காளீஸ்வரி, வட்டார செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.

ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மூன்று நபர் குழு வெளியிட்ட அறிக்கையில், இடைநிலை பள்ளி ஆசிரியர் களுக்கு பயனளிக்கும் எந்தஅறிவிப்பும் இல்லாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ@த @காரிக்கையை வலியுறுத்தி, பொங்கலூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டார பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, வட்டார செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment