Pages

Tuesday, July 23, 2013

நடை மேடை வாசிகளையும் வாக்காளர்களாக சேர்க்க உத்தரவு

இருப்பிட சான்று இல்லாத, நடைமேடை வாசிகளையும், வாக்காளர் பட்டியிலில் சேர்க்க வேண்டும், என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்?என, தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது. நிரந்தரமாக குடியிருப்புகளில் தங்காமல், வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து, நடைமேடைகளில் (பிளாட்பாரங்கள்), கூடாரங்களில் தங்கியிருப்பவர்களையும், காடுகளில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களையும், பட்டியிலில் சேர்க்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த பகுதி வாக்காளர் நிலை அலுவலர், அவர்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் பூர்வீகம். தற்போது செய்யும் தொழில் குறித்து கேட்டறிந்து வாக்காளர் பட்டியிலில் சேர்க்கவேண்டும். இவரிடம், இருப்பிட சான்று, வயது சான்று போன்றவற்றை ஆதாரமாக கேட்க வேண்டியதில்லை, என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment