Pages

Thursday, July 18, 2013

2015-ல் கல்வி அறிவு 80 சதவீதம் இலக்கு: அமைச்சர்  

ி: வரும் 2015-ம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள் தொக‌ையில் சுமார் 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பர் என மனிதவள மேம்பாட்டு்ததுறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் பேசியதாவது: வரும் 2015-ம் ஆண்டிற்குள் 80 சதவீதம் கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்றுவது மேலும் அடுத்த பத்தாண்டிற்குள் முழு கல்வி பெற்ற நாடாக மாறும் நிலை ஏற்படும் ‌என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு மக்கள தொகை கணக்கெடுப்பின் படி படித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 20 ‌கோடியாக மட்டுமே இருந்தது. இதில் பாதி பேர் பெண்களாவர்.பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்னர் தற்போது 70 ‌கோடி மக்கள் வாசிக்கவும், எழுதவும் கற்று தேர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment