Pages

Thursday, July 25, 2013

பள்ளி கல்வித்துறையில் 17 அலுவலர்களுக்கு பதவி உயர்வு

  பள்ளிக் கல்வித்துறையில், 17 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றுள்ளனர். கல்வித்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பணியிடங்கள், அதிக அளவில் காலியாக இருந்ததால், கல்விப்பணி பாதிக்கப்படுவதாக, பல்வேறு சங்கங்கள் புகார் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், 45 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர். அதுபோல், மாவட்ட கல்வி அலுவலர்களாக உள்ள, 17 பேர், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர்.

இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. கோவை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த, பாலமுரளி, நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருச்சி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மதிவாணன், அரியலூர் மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சுகன்யா, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment