Pages

Wednesday, July 10, 2013

பி.இ. முதலாம்ஆண்டு வகுப்பு ஆகஸ்டு 1–ந்தேதி தொடங்குகிறது

பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆகஸ்டு 1–ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 2013–2014–ம் ஆண்டுக்கான பி.இ.மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்சேர்க்கை நேரடியாக கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது. பொது கலந்தாய்வு கடந்த மாதம் 21–ந்தேதி தொடங்கியது.

கலந்தாய்வில் முதலில் இடங்கள் நிரம்பிய கல்லூரிகள் விரைவில் பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளைதொடங்க உள்ளன. அண்ணாபல்கலைக்கழக கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி வருகிற 19–ந்தேதி பி.இ. முதலாம்ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குகிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளும் ஆகஸ்டு 1–ந்தேதி பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க உள்ளன.

No comments:

Post a Comment