Pages

Thursday, June 06, 2013

eம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்புவோருக்கு ஜுன் 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600006 கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பொறியியற் கல்லூரிகள் / கலைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் 10.6.2013 முதல் 29.6.2013 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத்தவர் ரூ.300/-க்கான கேட்பு வரைவோலையினை (டிடி -  9.6.2013-க்கு பின் பெறப்படும் வகையில்)  “தி செகரட்ரி, தமிழ்நாடு எம்பிஏ / எம்சிஏ அட்மிஷன்ஸ் 2013 கவர்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்பத்தூர் 641013”  என்ற பெயரில் கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில்  எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விற்பனை  மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.   தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் (அருந்ததியர்), பட்டியல் / பழங்குடி (எஸ்சிஏ/எஸ்சி/எஸ்டி)  இனத்தவர் ரூ.150/-க்கான கேட்பு வரைவோலையினை சான்றிடப்பட்ட ஜாதிச் சான்றிதழின் நகலுடன் ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பப்  படிவங்களை   ““தி செகரட்ரி, தமிழ்நாடு, எம்பிஏ / எம்சிஏ அட்மிஷன்ஸ் 2013, கவர்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்பத்தூர் 641013” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.6.2013. எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2013 இரண்டாவது வாரத்தில் “அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூரில்” நடைபெறும்.  இதற்கான அறிவிப்பு உரியவர்கட்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment