Pages

Monday, May 20, 2013

தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல்

அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கவுன்சலிங் நேற்று நடந்தது. இதில், 900 பேர் புது இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங் நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது. 32 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களில், 'ஆன்லைன்' மூலம் நடந்தது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று காலை, மாவட்டத்துக்குள்ளே பணி இட மாறுதல் பெறுவதற்கும், பிற்பகல், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு செல்பவருக்கான கவுன்சலிங் நிகழ்ச்சி நடந்தது. இதில், 390 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்கு உள்ளேயும், 510 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேயும் புதிய இடங்களை தேர்வு செய்துள்ளனர். புது இடத்துக்கான மாறுதல் உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment