Pages

Saturday, April 20, 2013

கோவையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டக்கிளை சார்பில் கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்,

கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயலாளர் ஆனந்தராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் அறிவழகன், தங்கபாசு, தெய்வாணை, மாவட்ட துணை செயலாளர்கள் வசந்தகுமார், பாபு, ராமதிலகம், வட்டார செயலாளர்கள் தண்டபாணி, இக்னேசியஸ் ஜோசப் அந்தோணி, திருநாவுக்கரசு, ரமேஷ்குமார், சந்திரகுமார், விஜயகுமார், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கருப்புச்சாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment