Pages

Tuesday, April 23, 2013

கல்வித்துறை உதவியாளர் நாளை மறுநாள் பணி நியமனம்

பள்ளி கல்வித்துறையில், 563 இளநிலை உதவியாளர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை மறுநாள், நடக்கிறது.பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள், படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்கள், 563 பேர், பள்ளி கல்வித்துறையில், பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை மறுநாள் காலை, 10:00 மணிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வு பெற்றோர், அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, நாளை காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment