Pages

Monday, April 22, 2013

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மே 5–ந் தேதி முதல் விண்ணப்பம்

18 அரசு மருத்துவ கல்லூரிகள் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 6–ந் தேதியில் இருந்து 10–ந் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை மும்முரமாக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு பொது மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 145 மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். இந்த இடத்தில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே மீதம் உள்ள 1,823 இடங்கள் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்கும்.

இந்த இடங்களை நிரப்பவும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பவும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப படிவம், பிராஸ்பெக்டஸ் அச்சடிக்கப்பட்டுள்ளன. மே 5–ந் தேதி முதல் விண்ணப்பம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 5–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20–ந் தேதி.கவுன்சிலிங் ஜூன் மாதம் 21–க்கு முன்னதாக நடத்தி முடிக்கப்படும்.இப்போது திருவண்ணாமலையில் இந்த கல்வி ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரி செயல்படத்தொடங்கும். அதன் மூலம் இந்த வருட மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி தொடங்கினால் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். அதில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போய்விடும்.

அதுபோல சென்னை அரசு பொது மருத்துவ கல்லூரியில் இப்போது 165 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த கல்லூரியில் மேலும் 85 மாணவர்களை சேர்க்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சென்னை மருத்துவ கல்லூரி விண்ணப்பித்துள்ளது.சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 150 உள்ளன. மேலும் 100 இடங்கள் கேட்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment