Pages

Monday, March 18, 2013

ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாற்ற கோரிக்கை

  "நடப்பு கல்வி ஆண்டில், 3,000 ஆசிரியர் பயிற்றுநர்களை, பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்' என, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் அறிக்கை: ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளிக்கு இடம் மாறுதல் செய்யும்போது, 1:2 என்ற முறையில், கலந்தாய்வு நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு முன், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நிரப்பப்படாமல் உள்ள, "டேட்டா ஆபரேட்டர்' மற்றும் கணக்காளர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment