Pages

Thursday, March 28, 2013

தமிழ் இரண்டாம் தாள் : 5 மதிப்பெண்கள் வழங்கப்படும

  தமிழகத்தில் இன்று நடைபெற்ற 10ம் வகுப்புக்கான தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், படிவம் இல்லாமல் இருந்த 38வது கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்புக்கான தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கான வினாத்தாளில், 38வது கேள்வியில், வங்கிப் படிவத்தை நிரப்பவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கான படிவம் வழங்கப்படவில்லை. எனவே, இதனால் தேர்வின் போது மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த கேள்விக்கான பதிலை எழுத முயற்சி செய்திருந்தாலே, மாணவர்களுக்கு முழுதாக 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment