Pages

Thursday, February 28, 2013

பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின

   தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கியது. இந்த தேர்வு , மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கேள்வித்தாள் படித்து பார்ப்பதற்கு வசதியாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்வு மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வை தொடர்ந்து, தேர்வு மையங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment