Pages

Wednesday, January 09, 2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தர் நியமனம்

   தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மதுரையைச் சேர்ந்த முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்துவந்தது.

இப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலனை நியமித்து, தமிழக ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டார். இவர் மதுரை பசுமலையைச் சேர்ந்தவர். பியுசி படிப்பை பாத்திமா கல்லூரியிலும், பி.எஸ்சி., பட்டத்தை மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியிலும், எம்.எஸ்சி., பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பெற்றவர்.

No comments:

Post a Comment