Pages

Tuesday, January 01, 2013

பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவராக நீதிபதி சிங்காரவேலு நியமனம்

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக கடந்த ஆண்டு முதல் சிங்காரவேலு பதவி வகித்துவந்தார்.

டிசம்பர் 7-ம் தேதியுடன் நிர்ணயக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து மீண்டும் அப்பதவிக்கு சிங்காரவேலு நியமிக்கப்பட்டுள்ளார். வரும் கல்வியாண்டில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை சிங்காரவேலு தலைமையிலான குழு  நிர்ணயிக்க உள்ளது.

No comments:

Post a Comment