Pages

Thursday, December 20, 2012

மாணவர்களுக்கு தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க தேர்வுத்துறை உத்தரவ

அரசு பொதுத்தேர்வுகள் இந்தாண்டு மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கு தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே சரிபார்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. எனவே இந்தாண்டு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் பட்டியல் தவறில்லாமல் இருக்க அந்தந்த தலைமையசிரியரே திருத்தம் செய்து கொள்ள தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதுவோரின் பெயர், பிறந்த தேதி, இனம், தேர்வு எழுதும் மொழி, பதிவு எண், பாட வரிசை, புகைப்படம் என அனைத்தும் விவரங்களும் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். இதில் தவறு இருப்பின் ஆன்லைனில் வெளியிடும் பட்டியலில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். இதனால் மாணவர்களுக்கு சரியான பட்டியல் வெளியிட முடியும் என தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment