Pages

Friday, December 07, 2012

பிளஸ் 2 தனித்தேர்வு 32.10 சதவீதம் பேர், "பாஸ்'

  பிளஸ் 2 தனித்தேர்வில், 32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். அக்டோபரில் நடந்த தனித்தேர்வை, 47 ஆயிரத்து, 387 பேர் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இணைய தளத்தில், நேற்று வெளியானது.

துறை வட்டாரத்தினர் கூறுகையில், "32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். அதாவது, 15 ஆயிரத்து, 212 பேர், தேர்ச்சி பெற்றனர்' என, தெரிவித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 17, 18 மற்றும்19ம் தேதிகளில், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெறலாம். "தத்கல்' திட்டத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் செய்ய, தீதீதீ.ஞீஞ்ஞு.tண.ணடிஞி.டிண என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment