Pages

Saturday, December 29, 2012

நியாயவிலைக் கடைகளில் ஜனவரி 1 முதல் இலவச வேட்டி சேலைகள

சென்னை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலைகள் ஜனவரி-1 முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்றுசென்னை மாவட்ட ஆட்சியர்(பொ) தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பொங்கல் திருநாள் 2013ஐ முன்னிட்டு தமிழக அரசால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் வரும் ஜனவரி 1ஆம் தெதி முதல் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 1ம்தேதி முதல் விலையில்லா வேட்டி சேலை நியாயவிலைக் கடைகளின் மூலமாக வழங்கப்பட உள்ளது. அவை பட்டியலில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்பட உள்ளன. குடும்ப அட்டை எண் வரிசையாக வேட்டி சேலை வழங்கும் பணி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது அட்டை எண்ணுக்கு உரிய நாளில் வேட்டி சேலையை பெற்றுக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர்(பொ) ஆர்.சீத்தாலட்சுமி  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment