Pages

Monday, October 29, 2012

வருவாய் திறன் உதவித்தொகை தேர்வு:விண்ணப்பங்கள் வரவேற பு ்

தமிழகத்தில், டிச., 30ம் தேதி நடக்க இருக்கும், தேசிய வருவாய் திறன் உதவித் தொகை தேர்வுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தேசிய வருவாய் திறன் படிப்பு உதவித் தொகைக்கான, தேர்வு நடக்கிறது. நவ., 9ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர்களிடம், 50 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி, பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும

்.கடந்த, 2011 - 12 கல்வியாண்டில், ஏழாம் வகுப்பு தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், 50 சதவீதம்; பிற மாணவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு, தலா, 6,000 ரூபாய் உதவித் தொகை, மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம், நவ., 12ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலர், ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment