Pages

Monday, October 29, 2012

ரயில் கட்டணம் உயரலாம்: பவன்குமார்

ிதேவைப்பட்டால் பயணிகளுக்கான ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என புதிதாக ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார். மேலும் பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ரயில்வே துறை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், தினசரி 11,000 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்புக்களை தான் அறிவதாகவும், அவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார். பதவியேற்ற மறுநாளே கட்டணத்தை உயர்த்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment