Pages

Thursday, October 18, 2012

ரயில் "தத்கால்' முன்பதிவுக்கு வருது தனி விண்ணப்பம்!

  ரயில் டிக்கெட், "தத்கால்' முன்பதிவுக்கு, தனி விண்ணப்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவில், கடைசி நேர பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, "தத்கால்' முன்பதிவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. "தத்கால்' முன்பதிவுக்கு அடையாள அட்டை, நேர மாற்றம் என, பலவித நடவடிக்கைகள் எடுத்த போதும், முன்பதிவுக்கு வரிசையில் நிற்பவர்களை வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.

மேலும், இப்போது வழங்கப்படும் விண்ணப்பம், வழக்கமான முன்பதிவு, ரத்து, "தத்கால்' ஆகியவற்றுக்கும் ஒன்றாக உள்ளது. இதை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க, "தத்கால்' முன்பதிவுக்கு என்று, தனி விண்ணப்பத்தை அறிமுகப்படுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

. "தத்கால்' விண்ணப்பம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.மேலும், முகவரி உட்பட பிற தகவல்களை தவறாகக் குறிப்பி ட்டால், அதற்குரிய அபாரதம் அல்லது தண்டனை என்ன என்பதை எச்சரிக்கும் வகையில், விண்ணப்பத்தில் எச்சரிக்கை குறிப்புகள் இடம் பெற்று இருக்கும்.

No comments:

Post a Comment