Pages

Sunday, September 30, 2012

இனி முறைகேடு நடக்காது: நட்ராஜ் உறுதி

  வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 1,807 பணியிடங்களை நிரப்புவதற்கான வி.ஏ.ஓ.தேர்வுகள் இன்றுதமிழகம் முழவதும் நடந்துவருகிறது. 9.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,

இன்று நடக்கும் வி.ஏ.ஓ. தேர்வு வினாத்தாள் குறித்த விடைகள் இன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும். முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்-2 தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இனி எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment