Pages

Monday, September 03, 2012

காஞ்சிபுரம், நாமக்கல், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

          தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,  வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக இருந்த எல். சித்திரசேனன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹனிஷ் சஹாப்ரா வேளாண்மைத் துறையின் கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

பி. ஷங்கர் வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், அஜய் யாதவ், முனிசிபல் நிர்வாகத்தின் இணை ஆணையராகவும்,

டி. ஜகன்நாதன் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும், ஜே. குமரகுருபரன் தகவல் மற்றும் பொதுத் தொடர்பு இயக்குநராகவும்,

பி. செந்தில்குமார் அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், அனு ஜார்ஜ், பொதுப்பணித் துறை இணைச் செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment