Pages

Tuesday, September 11, 2012

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

     ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதனை 6.8 லட்சம் பேர் எழுதினார்கள். ஆனால், 2,488 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்ததை அடுத்து, மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய யாமினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய தலைவரை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment