Pages

Tuesday, September 11, 2012

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கோவை 07.09.2012 அன்று கோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்ட நடவடிக்கை குறிப்பு

      *அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழாக்களை கட்டாயம் நடத்த வேண்டும்.

*உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதம் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் 25 பள்ளிகளை ஆய்வு செய்தல் வேண்டும். 
*அரசின் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

*ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருகைபுரிய வேண்டும். *அனைத்து தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் வரும் கோடை விடுமுறையில் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள வீடு வீடாகச் சென்று கூடுதல் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
*அதிக நர்சரி  பள்ளிகள் உள்ள கிராமத்தில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குதல்.
*அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது 50 மாணவர்களாவது இருக்கும் வகையில் மாணவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். *அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் செஞ்சுலுவைச் சங்கம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  *மாதந்தோறும் ஜமாபந்தி முறையில் நிலுவையிலுள்ள ஆசிரியர்களின்  கோரிக்கை மனுக்களை பரிசீலினைச் செய்து உடனுக்குடன் உரிய ஆணைகளை வழங்க வேண்டும். 
*அனைத்து பள்ளிகளிலும் Work Done Register பேணப் பட வேண்டும்.

No comments:

Post a Comment